பக்கங்கள்

இங்கே துலாவு

ஞாயிறு, 7 ஜூன், 2015

யாரைக்கேட்டு இப்படி செய்கிறீர்கள்?

     யாரை கேட்டு இப்படி செய்கிறீர்கள்: 
  இன்று பண்பளைகளின் வரவு அதிகரித்தவண்ணம் உள்ளது.
இன்று குரைந்த வயதிலேயே அறிவிப்பாளர்களாக  இலசுகள் மாரி கலக்குகிறார்கள்.
பொய்கள் என்றும் அழகானவை!
 அந்த வகையில்தான் நான் சொன்ன பொய்யும்.
வானொளிகள் புதுமை என்ற பேரில் தொடர்ச்சியாய் 3 பாடல்கள்;
4 பாடல்கள் என ஒளிபரப்பி பரவசப்படுகிறார்கள்.
ஐந்து நிமிட செவ்வியைக்கூட;
 4 மணி நேர நிகழ்ச்சியாய் செய்யும் திறமைய நினைத்தால் எறிச்சல் தான் வருகிறது.
அதற்காக ஒளிபரப்பப்படும் புரோமோக்களை கேட்கும் போது ஊரைவிட்டே ஒடிவிடலாம் போல் இருக்கிறது.
 இன்றய அறிவிப்பாளர்களின் திறன் என்ன?
நிகழ்ச்சி பேரை சொல்வதும், நேரத்தை மட்டும் சொல்வதா.
வானொளி கேட்பவர்கள் எள்ளாம் கிருக்கனா?
இவர்கள் எதை வைத்து இப்படி எள்ளாம் செய்கிறார்கள்.
இன்று வானொளியின் முக்கிய கச்சா பொருளான பாடல்கள் பற்றி என்ன தெரியும்.
முக்கிய குறிப்பு நல்ல அறிவிப்பாலர்கள் பற்றி சொல்ல வில்லை.
இன்று சிறப்பாக அறிவிப்பு செய்பவர்களில் பலர் தங்கள் நடுத்தர வயதை தொட்டவர்களாகவும்;
அவ்வயதை தாண்டியவர்களாகவும் இருக்கின்றனர்.
இன்று வானொளிகளின் பாடல் தெரிவு  திறன் மிகவும் மோசமாக உள்ளது.
பாடலை எழுதியது யார்?
பாடியவர்கள் யார்?
இசை அமைத்தது யார்?
 இப்படி எதையும் சொல்வதில்லை
ரகுமான் பாடலும் இளயராஜா பாடலும் எங்களுக்குத் தெரியாதா?
அதைப் பற்றி மேளதிக விடயங்களை சொல்ல வேண்டாமா?
வாங்கும் ஊதியத்திற்கு நியாயம் செய்ய வேண்டாமா?
இன்று ஸ்க்ரிப்ட் ரையிட்டர்கள் வேறு வந்து விட்டனர்.
அப்படி என்றால் அறிவிப்பாளரின் நிலை என்ன?
இணையத்தில்  பல கட்டுரைகள் கொட்டி கிடக்கின்றன.
அவற்றை படித்து விட்டுக்கூட சுவாரசியமாய்  நிகழ்ச்சிகளை  வளங்களாம்.
தகவள்கள் கொட்டிக்கிடந்தும்.
வரச்சியாய் நிகழ்ச்சிகளை வளங்குவதை நினைத்தால் கடுப்புதான் வருகிறது.
இன்று வானொளிகள்  சினிமா கிசுகிசுக்களை வைத்தே ஒரு நாள் முழுமைக்கும் ஓட்டி விடுகிறார்கள்.
விளையாட்டு பற்றியும் பேசுகிறார்கள் ஆனால் அது ஒரு சாதாரன ரசிகர்களுக்குக்கூட தெரிந்த விடயங்களாக இருக்கிறது.
வானொளியை கேட்பவர்களுக்கு நீதி செய்யும் வகையில் பல வானொளிகளின்  ஒளிபரப்பு இல்லை.
இது போன்ற நிலை நம் வானொளிகள் மீது மதிப்பை கெடுக்கும்.
இப்போது  நம் தமிழ் நாட்டு வானொளிகள்;
நம் மொழியை கொலை செய்யவில்லை!
 படுகொலை தான்
செய்கின்றது.
இப்போது கத்திப்பேசு வது ஒரு ஸ்டெயில் போல கருதப்படுகிறது.
 இப்படி சம்மந்தம் இல்ளாமல் கத்திப்பேசி
 ஒரு தொலைக்காட்சி தொகுப்பாலினி மூக்குடைபட்டது நினைவிருக்கும் என நினைக்கிறேன்.
நேயர் கடிதம் என்ற நிகழ்ச்சி வானொளியில் ஒளிபரப்பப்படும்.
அது போல் ஒளி பரப்பப்பட்டால் பலரின்  வண்டவாளங்கள் வெளியே தெரியும்.
இன்று பலரை தொலைக்காட்சியை நோக்கி ஓட வைத்த பங்கு பண்பளைகளுக்கு உண்டு.
ஒரு பொருளை விரும்ப வேண்டுமானால் அது தணித்துவமாய் இருக்க வேண்டும்.
அப்படி பல வானொளிகளுக்கு என்னமே கிடையாது.
எள்ளாம் ஒரே குட்டையில்  ஊரிய மட்டையாக வேஉள்ளது.
 இப்படி சொல்லுரியே உனக்கென்ன தகுதி இருக்குன்னு கேட்குரீங்களா?
தமிழக முழுமையும் உள்ள வானொளிகளை
கேட்டு கொதிச்சுப்போயித்தான் எழுதுறேன்.
வானொளிகளை வெளிப்படயாகவும் கூற முடியும்
பாவம் பொழச்சுப்போங்கப்பா!
 இனி நானே பாட்ட போட்டு கேட்டுக்கிறேன்.
பண்பளைகளே வேனாம்ப்பா.
 இவங்கல திருத்த முடியாதுன்னு தெரிஞ்சும் எழுதுர என்ன திருத்த முடியுமுன்னு நினைக்கிறீங்க?
வாய்ப்பே இல்ல!
   முக்கியக்குறிப்பு இன்றும்
சிறப்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் பண்பளைகள் உள்ளது
 அவர்களுக்கு எனது கோடிக்கணக்கான நன்றிகளும்;
 மேளும் தொடர வாழ்த்துக்களும்!

சனி, 6 ஜூன், 2015

ரயிலின் பயனம்



     யிலின் பயணம்-
ஜாதகம் பார்த்தார்கள்
சகல பொருத்தமும் பார்த்தார்கள்
  பொருந்திய பிந்தான்
போய்ப் பொண்ணு பார்த்தார்கள்
  பொண்ணு பிடிச்சிருக்கா
சொல்லுங்க மாப்புள்ள
  புடிக்கலன்னாலும்
விடப்போர்றதில்ல
  சம்மதமென்று
சமிக்ஞை எழுந்தது
   காப்பி பலகாரங்களால்
வயிறு நிறைந்தது
  தட்டு மாத்துச்சு தல நரச்சதுக
பஞ்சாங்கம் பாத்து
  நாள் குறிச்சதுக
ஆண்டவன் சன்னிதியில்
  நடந்தது திருமணம்
அக்னி சாட்சியாய்
  இணைந்தது இருகரம்
 ித்தோடு முடிந்தது
பெற்றோரின் பொருப்பு


பொண்ணு தேடும்
  சிரமம் தரவில்லை
மற்றொரு தரப்பு
  பேருந்து நிறுத்தம்தான்
பூலோக சொர்க்கம்
  அங்குதான் தேவதைகள்
அணிவகுத்து நிற்கும்
  பார்வை வலைவீசிப்
பாவையைத் தேர்ந்தெடுப்பான்
  கண்ணே மணியே என்று
கவிக்கணைகள்
  அவன் தொடுப்பான்
இரு மனமும் இணைந்தது
அது திருமணம் செய்ய இசைந்தது
சம்மதிக்கவில்லை இரு வீட்டாரும்
  பதிவுத் திருமணம் நடந்தது
ஒரு ரோட்டோரம்
  நாலைந்து ஆண்டுகள் ஓடியது
குடும்பத்தில் ஒன்று கூடியது
  சின்னச் சின்னத் தவறுகள்
பலூனாய் விரிந்தது
  குட்டிக் குட்டிக் கோபங்களும்
கொழுந்து விட்டு எரிந்தது
  புரிந்துணர்வுகள்
புதைக்கப்பட்டது
  பிடிவாதம் மட்டும்
எழுந்து நிக்குது
  அக்னி சாட்சியாய்
ஆண்டவந் முன்பும்
  மனிதன் சாட்சியாய்
சட்டத்தின் முன்னும்
  நடந்த திருமணம் நாடகமானது
விவாகரத்துக்காக
  நீதிமன்றத்தை நாடுது
தண்டவாலங்கள்
  பிரிந்து போனால்
ரயில் பயணங்கள்
  என்னவாகும்?

காலமும் நானும்!



    ாலமும் நானும்-
தவழ்ந்த போதும் ஓடியது,-
அமர்ந்திருந்த போதும் ஓடியது
பின்னால் பாத்துகொள்ளலாம் என்று
                     கிடப்பில் பல வைத்தேன்
நினைத்ததை நிறைவேற்ற நேரமிருக்கிறது
                  என ஒதுக்கி வைத்தேன்
காலம் கிடக்குதெனக் கண்மூடிப்
           படுத்திருந்தேன்
உறக்கத்தை வரவழைத்து கனவுகளில்
திளைத்திருந்தேன்
விழித்தபோது மனது வலித்தது
நான் வீணாக்கிய நாட்களை நினைத்து
சாதிக்கலாம் என புறப்பட்டேன்
            மரணம் வந்து தழுவியது
நான்தான் நடந்தேன்
காலம் ஓடிக்கொண்டே இருந்தது.

அன்புள்ள முதல் காதலிக்கு,,,,,



    ன்புள்ள முதல் காதலிக்கு;
நான் மிகுந்த நலம்.
 உன் நலத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
நீ வந்ததால் நான் எத்தனை துயரத்தை அனுபவித்தேன் தெரியுமா?
நீ போன பின்பு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.
 உனக்கு மட்டும் ஏன் இனிமையான குரல் இருந்தது?
 அங்கு தான் நான் விழுந்தேன்.
அதை வைத்து அடிக்கடி பேசி இருந்தாலாவது;
 விரைவில் கேட்டுக்கேட்டு பிடிக்காமலாவது போயிருக்கும்!
திருச்சி வானொலியில் ஒலிக்கும் திரை இசை பாடல் போல!
 எப்போதாவது தான் நீ வாய் திரந்து பேசுவாய்!
உனது வாய்சை கேட்பதற்காக;
நான் வகுப்பு தலைவனான [c.p.l.] வரலாறு உனக்குத்தெரியுமா? 
 வகுப்பரையில் நீ பேசாமடந்தை!
விடுதியிலோ நீ வாயாடிக்குழந்தை!
இதன் விலைவு என்ன தெரியுமா?
 உனக்கெங்கே தெரியப்போகிறது. சொல்கிறேன் கேழ்.
கிரிக்கேட் போட்டிகலின் கோப்பைகலாக முருக்கும், மிச்சரும் இருக்கும்.
 ஒருமுரை மிச்சர் கிண்ணத்தின் இருதிப்போட்டியில்
  எளிமையான கேச்சை நான் தவரவிட அது சிக்சராகிப்போனது!
அப்புரம் என்ன, மிச்சர் எதிரணிக்குப்போனது.
 அந்தப்பிடியை ஏன் தவரவிட்டேன் தெரியுமா?
 அந்த குயில் மாடியில் பேசிக்கொண்டிருந்தது! அதில் கவனத்தை செழுத்த இப்படி நேர்ந்தது. அணிவீரர்கள் மொத்தமாய் என்னை திட்ட; அன்று நீ சத்தமாய் கத்த;
 அந்த சங்கீதக்குரலில் என்னை மரந்து; வானில் பரந்துகொண்டிருந்தேன்!
  இப்படி இழந்த கோப்பைகள் ஏராலம்.
 பெண் பேச்சை கேட்டால் முன்னேர முடியாது என இதனால் தான் சொன்னார்களோ!
அந்த பொன்னு ஒன்னையத்தான் பாக்குது என சில பார்சலி நன்பர்கள் பரிந்துரை செய்ய; பயங்கரமாய் காதல் மனதுக்குள் படரத்தொடங்கியது.
உனது பேர் வரும் பாடல்கள் எங்கேனும் ஒலித்தால்;
 நான் அதை நின்று கேட்காமல் செல்ல மாட்டேன்.
எப்பொழுது 10-ஆம்  வகுப்பு படிக்கப்போகிறோம்?
 அப்போழுது தானே டேப்ரெக்காடர்கள் கொடுப்பார்கள்;
 அதில் அவலின் பெயர் வரும் பாடல்களாக பதிந்து கேட்க வேண்டும் என மனம் துடிக்கும்.
 நானயம் சுண்டி நாள் குறித்து; காதலை உன்னிடம் சொல்ல வந்தால்,
 நீ அன்று வேறொரு பையனோடு பேசினாய்!
கோட்டைகள் சரிய; துக்கத்தோடு விடுதிதிரும்பி; தூக்கத்தில் கணவில் புலம்பினேன்.
 அடுத்த நால் விருந்து சாப்பாட்டில் கொடுத்த லட்டை எனக்கு கொடுத்தாய்!
நல்ல வேலை அல்வா கொடுக்கவில்லை.
பித்தாகரஸ் தேற்றம் கூட எலிமையாய் புரிந்தது;
பில்லைங்க மனசத்தான் புருஞ்சுக்க முடியல என புலம்பினேன் மனசுக்குள்ள!
ொரு பேப்பரை என்னிடம் கொடுத்து வாசித்துப்பார்க்கச்சொன்னாய்.
ஆர்வம் கொப்பலிக்க வாங்கினேன்;
தலைதூக்கிய ஆர்வம் தலையை தொங்கப்போட்டுவிட்டது.
காடுகளின் பயன் என தலைப்பிருந்தது!
வாசித்து முடித்துவிட்டு; இதை யார் எழுதியது எனக் கேட்டேன்.
நான் தான் என உர்ச்சாகமாய் சொன்னால்!
இவ்வளவு அருமையாய் கட்டுரை எழுதுகிறாயே!
ஒரு வித அமைதி அவளிடம்,
இந்த வாய்ப்பை விடக்குடாது என மேலே தொடர்ந்தேன்.
கட்டுரையில் வார்த்தைகளை அழகாக தேர்ந்தெடுத்து கோர்த்திருக்கிறாய்,
ஒரு பக்கத்திற்குள் முடித்திருப்பது;
கட்டுரை உலகில் ஒரு புதுமை;
என விடாமல் ஒரு சொற்பொழிவையே ஆற்றி விட்டேன்!
கையிலிருந்து விரைவாக பேப்பரை பிடிங்கியவள்;
இந்த கவிதை எப்படி இருக்கு என்று கேட்கத்தான் இந்த பேப்பரைக்கொடுத்தேன்.
எனக் கூரிவிட்டு விரைவாக நடந்தால்!
அன்று பபேசியவள் தான் அதற்குப்பிரகு நான் பேச பல முயர்ச்சிகள் செய்தும்;
பேசவைக்க முடியவில்லை!
காலங்களும் உருண்டோடியது;
10-ஆம் வகுப்பு முடித்ததும் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டால்.
இப்போதெள்ளாம் கேச்சுகளை நான்  நழுவ விடுவதில்லை!
   ஆதாரம்,
ொரு முழுப்பார்வையற்றவனின் முதல் காதல் அனுபவங்கள்
என்ற நூலிலிருந்து.
சத்தியாலய வெலியீடு ரு. நீங்கள் விரும்பியதை கொடுக்கலாம்!
பின் குரிப்பு: கட்டுரையாலரின் அனுபவமல்ல இக்கட்டுரை!
கட்டுரையாளர் சிங்கிலுக்கே சிங்கியடிக்கிறார்!
அவருக்கு எங்கே முதல் காதலி, இரண்டாவது காதலி எள்ளாம் இருக்கும்;
இவற்றை கருத்தில்கொள்ளவும்.