இங்கே துலாவு

சனி, 27 ஏப்ரல், 2019

பாடாய் படுத்துது

காரி துப்பினாலும்;
கடுங்கோபம் கொண்டு திட்டினாலும்;
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும்;

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

கண் தெரியாத இசைஞன்

இன்று சர்வதேச புத்தக தினம். அதனால் இன்று ஏதேனும் ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்து விடுவது என முடிவு செய்தேன். எனவே நீண்டநாளாக படிக்க நினைத்த ரசிய நாவலான கண் தெரியாத இசைஞன் என்ற நாவலை படிக்கத் தொடங்கினேன். இந்நாவலின் கதை கடந்த கால எனது வாழ்க்கை

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஆனால், நீங்கள்?

இந்த பொதுத்தேர்தலிலும்;
எந்தப் பெரிய கட்சியும்;
மாற்றுத்திறனாளிகளுக்கு சீட் கொடுக்கவில்லை!

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

வியாழன், 11 ஏப்ரல், 2019

நான்காவது தேசிய வாகையர் பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டப் போட்டி

பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கால்பந்தாட்டப் போட்டியை இந்திய பார்வையற்றோர் கால்பந்தாட்ட சம்மேளனம் பெங்களூரில் 12-4-2019 தொடங்கி 15-4-2019 வரை நடத்துகிறது. இந்தியா முழுமையிலிருந்து 16 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. அதில் கலந்து கொள்வதற்காக, எங்க ஊரில் இருந்து பெங்களூர் நோக்கி பயணத்தை தொடங்கியாயிற்று. இத்தருணத்தில் ஒரு முன் கதை சுருக்கத்தை பார்ப்போம். 2010 டெல்லிக்கு தமிழக கால்பந்தாட்ட அணி விளையாட செல்கிறது. அப்போது அவர்களுக்கு பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டம் குறித்து எதுவும் தெரியாது. அங்கு விளையாடும் சிறந்த அணிகளின் ஆட்டத்தை உற்றுநோக்கி கால்பந்தாட்ட நுணுக்கத்தை கற்றுக்கொண்டு தமிழகம் திரும்புகிறார்கள். 2012 ஆம் ஆண்டு தேசிய அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன. போட்டிகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கும் மேலாக கடும் பயிற்சியுடன் அணி தயாராகிறது. அதிகாலை 3 மணி தொடங்கி காலை ஆறு முப்பது வரையிலும், மாலை 3 மணி தொடங்கி ஏழு மணி வரையிலும் நாள்தோறும் மாணவர்களுக்கு சரவண ராமன் சார் பயிற்சி கொடுத்தார். அந்த ஆண்டு கால்பந்தாட்ட தோடு, கபடி, பளு தூக்குதல் போன்ற போட்டிகளையும் நடத்தினர். 12 அணிகள் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டன. அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர் ஒவ்வொரு குழுவிலும் 6 அணிகள் இடம் பெற்றிருந்தன. தமிழக அணி இடம்பெற்றிருந்த பிரிவில் தான் நடப்புச் சாம்பியன் களும் இடம்பிடித்திருந்தனர். அக்குழுவில் அனைவரையும் வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு தெரிவானோம். துரதிஷ்டவசமாக அரை இறுதியில் தோல்வியைத் தழுவிநோம். ஆனால் கபடியிலும் பளுதூக்குதலில் உம் முதல் இடத்தை பிடித்தோம். இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் சரவண ராமன் சார். அத்தொடரில் தான் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சியாளர்கள் எத்தனை முக்கியமானவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன் . இன்னொரு சமயம் பார்வையற்றவர்களுக்கு விளையாட்டு பயிற்சியாளர்கள் எத்தனை முக்கியமானவர்கள் என்பது குறித்து முகநூலில் எழுதுகிறேன் . அதன் பிறகு நாங்கள் படித்த இடத்தில் விளையாட்டிற்கு சரியான ஒத்துழைப்பு இல்லை. அதனால் மேற்கொண்டு அணியாக செயல்பட முடியவில்லை. 2017 வரை தேசிய போட்டிகளில் தமிழக கால்பந்தாட்ட அணி எதிலும் கலந்து கொள்ளவில்லை. 2018 ஆம் ஆண்டு சரவணராமன் சாரின் கீழ் ஒரு குடையாக ஒன்றிணைந்து, தமிழக பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் tavsa தொடங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கால்பந்தாட்ட அணி உயிர்பெற தொடங்கியிருக்கிறது. முன்பைவிட பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டம் வேகமடைய தொடங்கியிருக்கிறது. இளையவர்கள் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். கடந்த பெப்ரவரி மாதம் தேசிய அளவிலான பயிற்சி முகாம் கொச்சியில் நடைபெற்றது. அதற்கு சென்றிருந்த தமிழக இளம் வீரர் பாண்டியராஜநின் திறமையைக் கண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த பயிற்சியாளர்களும் இந்திய பயிற்சியாளர்களும் வெகுவாக பாராட்டினர். இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இந்திய அணியில் விளையாடுவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களின் உற்சாகமான இது போன்ற சொற்களை நெஞ்சில் சுமந்து நம்பிக்கையோடு போட்டியை எதிர்கொள்ள செல்கிறோம். கட்டாயம் களத்தில் எதிரணிகளுக்கு நாங்கள் சவால் அளிப்போம். குறுகிய காலத்திற்குள் நேஷனல் சாம்பியன்களாக எழுந்து நிற்போம்.