இங்கே துலாவு

செவ்வாய், 16 அக்டோபர், 2018

இளையராஜா என்ன தொக்கா?


இது ஒரு சுய தம்பட்ட பதிவு என்பதைக் கூறிக்கொண்டு தொடர்கிறேன்.

2012 அன்று இதே நாள் பத்திரிக்கையாளர் மாலனை சந்தித்தேன். புதிய தலைமுறை செய்தியாளர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்வை நடத்தியது. எனவே செய்தியாளர்களை தெரிவுசெய்வதற்கான  நேர்முகத்தேர்வு நடத்த அவர் வந்திருந்தார். கட்டுரை எழுதுதல், பொது
அறிவைச் சோதித்தல் ஆகிய இரு தேர்வுகளிலும் வென்று 6 பேர் தெரிவாகியிருந்தோம்.

 இப்ப சொல்லப்போர பாயிண்ட முக்கியமா கவனிக்கனும்.

அவ்விரு தேர்விலும் 200-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அதிலிருந்துதான் 6 பேர் இறுதித்தேர்வுக்கு தெரிவானோம். அதிலும், அத்தேர்வை எழுதியவர்களுள் நான் ஒருவன் மட்டுமே பார்வைமாற்றுத்திறனாளி. அந்த பெருமையை நாந்தானே பதிவுசெஞ்சாகனும். ஏன்னா? வேற யாருக்கும் அதுபற்றித் தெரியாதே?

நேர்முகத்தேர்வுல கலந்துக்கிட்டேன். அப்போதுதான் எண்போன்ற  பார்வைமாற்றுத்திறனாளி கணினி கற்றுக்கொள்ளாதது பெரிய தப்பென்று புருஞ்சுக்கிட்டேன். அப்புரம் அந்தப்பக்கம் தலைவச்சு படுக்ககூட இல்ல.

2013-ல் அம்மா மடிக்கணினி என் கைக்குக்கிட்டியது. கணினி வந்ததுமே ஆச தீரப் பாட்டுக்கேட்டேன், படம் பார்த்தேன். அது போரடிக்கத்தொடங்குனுச்சு.  அதுனால தமிழ் டைப்பண்ண பழகினேன். அப்ப முகநூலுல 2 வரி எழுதி போஸ்ட்போட்டுட்டு நன்பர்களுக்கெல்லாம் ஃபோன் போட்டு எம் பதிவ படிச்சியா? போய் லைக்போடுன்னு நச்சரிச்சுக்கிட்டுத்திரிஞ்சேன். கொஞ்சம் பெரிய பதிவா எழுதத்தொடங்குனவொடனே; அப்படி எழுதுறவங்கல்லாம் சேந்து ஒரு இதழ் தொடங்களாமுன்னு முடிவுசெய்தோம். 3 ஆண்டுகளாக அது கிடப்பில் கிடந்தது. இப்போதுதான் ஒரு நல்ல டீம் அமைந்தது. அதன் பயனாய் இப்போது விரல்மொழியர் மின்னிதழின் இணையாசிரியராக இருக்கிறேன்.

புதிய தலைமுறைக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்ல. ஆனா நாளை எனது வரலாற்றை எழுதுபவர் இப்படி எழுதக்கூடும்.

அவனொரு பார்வையற்ற இளைஞன். அவனிடம், முன்னேற வேண்டுமென்ற முயற்சியும்; வெல்ல வேண்டுமென்ற வேட்கையும்; துயரத்தைத்  துடைத்தெறியும் துணிச்சலும்; வின்பண்ணுவதற்கான வீரமும் இருந்தது. எனவே, புதியதலைமுறை மாற்றுத்திறனாளிகளின்  ஐகானாய் திகழ்ந்தான்.
அதே நேரத்தில், புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பித்தான். அங்கு அவனுக்கான பணிவாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் மனமுடைந்து போனான். உரக்கம்வராது தவித்தான். அதனால் ரகுமான் ஹிட்ஸ்சை கேட்க்கத்தொடங்கினான்.

அப்போது இளையராஜா என்ன தொக்கா? அவரோட இசை இதயத்தை வருடி இதமாய் தாழாட்டும். உரக்கத்திற்கு உகந்த இசை ராஜாவின் இசைதான். இப்படி சண்டையெல்லாம் போடக்கூடாது. இந்த போஸ்ட்டுக்கு தேவையான கண்டண்ட் ரகுமான் ஹிட்ஸ்லதான் இருக்கு.

கவலை மரந்து கானத்தில் லைத்திருந்த அவனுக்கு  அந்த வரி காதின் விழுந்தது.
எந்த வேர்வைக்கும் வேற்றிகள் வேர்வைக்குமே!
அவ்வரியைக்கேட்டதும் அவனுக்கு புது உற்சாகம் பிறந்தது. அதன்பிறகு வீட்டில் ஃபேனை போடாமல் அமரத்தொடங்கினான். அவனது அம்மாவோ, வேர்த்துக்கோட்டுதுல்ல ஃபேன போட்டுக்கிட்டு உக்கார வேண்டியதுதானே? எனத் திட்டிவிட்டு சுச்சைப் போட்டுச்செல்வார்கள். அம்மா போனதும் சுச்சை நிறுத்திவிடுவான். அப்போது, நெற்றியில் வடியும் வேர்வையை விரல்களால் துடைக்கும்போது; அவன் மனதில் ஒரு விதை விழுந்தது.

யோகாசெய்றவங்க மேலே உள்ள பாயிண்ட குறிச்சுக்கனும்.

அப்போது சரியாக ராஜவடிவன்பாலகணேசன் சார் ஃபோன் செஞ்சு, பொரட்டாவை பிய்ப்பதற்கும் விரல் பெரிதும் உதவுகிறது. அதனால் நம்ம இதழுக்கு விரல்மொழியர் என்றே பெயர் வைத்திடுவோமெனச் சொல்லியதும் மகிழ்ந்துபோனான். அவனது வேர்வைக்கு வெற்றி வேர்வைக்கத்தொடங்கியது. செய்தியாளனாய் வாய்ப்பு மருக்கப்பட்டபோதும்; ஒரு இதழை நடத்தும் அளவிற்கு வளர்ந்துகாட்டினான். அவன், நம்பிக்கையால் உலகை வென்று வாழ்ந்துகாட்டினான்!


அதனால்தான் சொல்லுறேன்,  எழுத்தாளர்கள் மீது ஒரு கண் வச்சுக்கிட்டே இருங்கள்.

2 கருத்துகள்: