சொற்களின் வழியேதான் ஒரு பார்வையற்றவர் இந்த உலகத்தை அறிந்துகொள்கிறார். அதற்கு, வார்த்தைகளின் வாகனமான நூல்கள் பெரிதும் உதவுகின்றன.
"காவிரி ஆற்றில் பாம்பு போல் நீரலைகள் புரளுகின்றன, நீரானது யானை போல் நகர்ந்து வருகிறது" என்றெல்லாம் )அம்மா வந்தாள்( நாவலில் தீ ஜானகி ராமன் வருணிக்கிறார். அவர் கண்களால் கண்டதை, வார்த்தைகளின் வழியே ஒரு பார்வையற்றவர், நூல் வாயிலாக அதனைத் தரிசிக்கிறார்.
ஒரு பார்வையுள்ளவரோடு நான் ஆற்றிற்குச் சென்றால், ஆறு வந்துவிட்டது என்று சொல்வதோடு அவர் நிறுத்திக் கொள்வார். ஆனால், ஒரு நூலானது அங்குள்ள காட்சிகளைத் தெளிவாக வர்ணிக்கும். அதனால்தான் புத்தக வாசிப்பு பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு அறிவை பெருக்குவதோடு, இந்த உலகைக் கண்டுணரவும் வழிவகை செய்கிறது. இப்படி பெரும் பயன் தரும் புத்தக வாசிப்பு, அவர்களுக்கு எளிதில் கிட்டுவதில்லை.
ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் வெளிவருகின்றன. அவற்றுள் மிகச் சில நூல்கள் பிரேயிலில் வந்தாலே பேரதிசயம். இன்று ஒரு சதவீதம் நூல்கள் ஒளி நூலாக வருகின்றன என வைத்துக்கொள்ளலாம். ஐந்து சதவீத நூல்கள் மின்னூலாகத் தோராயமாக வருகின்றன என வைத்துக் கொள்வோம். சுமார் 90% நூல்கள் பார்வையற்றோர் சுயமாகப் படிக்கும் வகையில் வருவதில்லை என்பது மிகப்பெரிய அறிவு புறக்கணிப்பு.
இத்தகைய புறக்கணிப்புகள் இருந்தாலும் பார்வை மாற்றுத் திறனாளிகள் நூல்களை வாங்கவே முயல்கின்றனர். அந்த நூல் வாங்கும் படலமுங்கூட மிகத் துயர் மிகுந்ததாகவே