இங்கே துலாவு

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கார்ப்பரேட் முதலாளிகள் மீதான கடுப்புக்கு காரணம்

கார்ப்பரேட் முதலாளிகள் என்றாலே நமக்கு ஏன் இத்தனை கடுப்பு வருகிறது என்ற காரணத்தைக் காலையில் கக்கூசில் அமர்ந்திருக்கும் பொழுதுதான் கண்டுபிடித்தேன்.

நம் சமூகத்தில் பலரது கனவுக் கன்னிகளாக இருந்த கதாநாயகிகளைப் பின்னாளில் ஏதோ ஒரு தொழிலதிபர்தான் கல்யாணம் செய்துகொள்கிறார். கனவுக்கன்னிகளை இழந்த கையறு நிலைதான் ஆழ்மனதில் வெறுப்பாக குடிகொள்கிறது. அந்த ஆழ்மன வெறுப்புதான் கார்ப்பரேட் முதலாளிகள் என்ற வார்த்தையைக் கேட்டதும் கிளர்ந்தெழத் தூண்டுகிறது. ஆண் மகன்களின் மனசாட்சியாக கவுண்டமணி  திரையில் "இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியல" என்று சொல்லும் போது, அது நம்மை கைதட்டி ஆரவாரிக்க சொல்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக