இங்கே துலாவு

சனி, 22 மே, 2021

சாப்பாட்டு நேரத்தில் உதிக்கும் சாப்டான சிந்தனைகள்

காளான் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுந்நு, இன்று Swiggy-யில் காளான் பிரியாணியும் காளான் 65 ஐயும் ஆர்டர் செய்தேன். இரண்டும் சேர்த்து 253 ரூபாய் வந்தது. Swiggy-யிலிருந்து முதலில் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தகவல் வந்தது, பிறகு, அதில் ஒன்று மட்டும் அவுட் ஆப் ஸ்டாக் என்று தகவல் வந்தது, கடைசியாக அந்த கடையே இயங்கவில்லை என்று தகவல் வந்தது. 

நான் காளான் சாப்பிட ஆசைப்பட்டது தப்பா என என் மனம் கொந்தளித்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. கடும் சோகத்தின் காரணமாக கீழே இருந்த நான்வெஜ் ரெஸ்டாரன்டை கிளிக்கி உள்ளே நுழைந்து ஒரு மட்டன் பிரியாணியும், சிக்கன் தந்தூரியையும் ஆர்டர் செய்தேன். கட்டணம் செலுத்தும் படி நிலைக்கு வந்து பார்த்தால் 50% தள்ளுபடிக்காந கூப்பன் இருந்தது. உடனடியாக அதை உபயோகித்துக் கொண்டேன். அதனால் வெறும் 240 ரூபாய்க்கே மட்டன் பிரியாணியும் சிக்கன் தந்தூரியும் கிடைத்தது.

இதனால் நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால்?

உங்கள் வாழ்வில் ஏதேனும் கைவிட்டு போனாலும் யாரேனும் கழட்டிவிட்டு போனாலும் வருந்தி நிற்காதீர்கள். இந்த வாழ்வு உங்களுக்கு எப்போதும் மிகச்சிறந்த ஒன்றையே பரிசளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

#சாப்பாட்டு_நேரத்தில்_உதிக்கும்_சாப்டான_சிந்தனைகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக