நான் பணிபுரியும் அரசுப்பள்ளியில் மாணவர்களும் சரி, அவர்களது பெற்றோரும் சரி கல்வியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதைக் காணும்போது அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை அறியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தம்தான் எனக்குள் ஏற்படும்.
எனக்கு அது இன்னும் நினைவிலிருக்கிறது.
எனக்கு நான்கு வயது இருக்கும்போது அரவிந்த் மருத்துவமனையில் என் கண்களை பரிசோதித்த மருத்துவர், "பார்வை நரம்பு விழிக்கோலத்துடன் இணையாததால் குழந்தைக்கு பார்வை கிடைக்க வாய்ப்பே இல்லை" என என் பெற்றோரிடம் சொன்னார்.
அதைக்கேட்டதும் அங்கேயே என் அம்மா உடைந்து அழத் தொடங்கி விட்டார். அழாதீங்கம்மா. பையன படிக்க மட்டும் வச்சிருங்க போதும். அவன் வாழ்க்க நல்லபடியா அமைஞ்சுடும் என்றார் அந்த பெண் மருத்துவர்.
இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் எனது அம்மா அந்தம்மா அன்னைக்கு சாமி மாதிரி சொன்னுச்சு. அது எத்தனை உண்மையா போச்சு என்கிறார்.
என் வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல் அந்த மருத்துவர் சொன்ன ஒரு வாக்கியந்தான்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக