இன்று பேருந்தில் வரும்போது, நிலவை கொண்டு வா பாடலை பேருந்தில் ஒலிக்கவிட்டுக்கொண்டு வந்தனர். அது ஃபர்ஸ்ட் நைட் சாங் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு சொல்லாமலே தெரியும்.
வழக்கமாக பசங்க தான் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு கூடுதல் மன எழுச்சியுடன் இருப்பார்கள்.
ஆனால் இந்தப் பாடலில் பெண்குரல் உற்சாகமாக, இன்று முதலிரவு என பாடும்.
ஆனால் ஆண் குரலோ, ஒரு சந்நியாசியை வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்தது போன்ற சோகத்தில் பாடும். (இன்றுமுதல் இரவு) இந்த வரியை கேட்டதுமே, அது எனக்கு உறுதியானது. கல்யாணம் ஆன பின்பு என் வாழ்க்கையே இருளில் மூழ்கி விட்டது என்று பாடுகிறார்.
ஒரே ஒரு வார்த்தை பிழை ஃபர்ஸ்ட் நைட் சாங்கை தத்துவ பாடலாக தரமுயர்த்தி விடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக