எனக்கு
பன்னிரண்டாம் வகுப்புக்கு கிளாஸ் இருக்கு என்றேன். ப்ளீஸ் வாங்கய்யா! இல்லாட்டி
மேக்ஸ் டீச்சர் வந்துருவாங்க.
எனக்கு
வகுப்பில்லாட்டி வந்துருவேன். ஆனா எனக்கு பன்னிரண்டாம் வகுப்புக்கு கிளாஸ்
இருக்கு. நீங்க போங்க. ஐயா எங்க நெலமையக் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. மேக்ஸ் டீச்சர்
வந்துருவாங்கைய்யா. இன்னைக்கி மட்டும் வாங்கையா. என்று அவர்கள் சொன்னதும் எனக்கு
சிரிப்பு வந்துவிட்டது.
ஒழுங்கா
இப்ப போங்க. இல்லாட்டி நாளைக்கி நான் லீவு போட்டுருவேன் என்றதும்,
சரி
போங்கய்யா. நீங்க நல்லாருங்கைய்யா! என்று சாபம் விட்டுவிட்டு வெளியேறினர்.
இந்தக்
கால மாணவர்கள் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். மேக்ஸ்
டீச்சர் வகுப்பெடுப்பதற்கெல்லாம் தமிழ் வாத்தியாருக்கு சாபம் விடுகிறார்கள் சை.
#வாத்தியார்_பரிதாபங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக