உன் காதல் கவிதைகள் அருமையென
பலர் கைகொடுக்கின்றனர்.
கவிதையில் வரும் காதலி யாரெனக்
கேட்டு பலர் நச்சரிக்கின்றனர்.
அவளின் நிழற்படத்தை
அனுப்பச்சொல்லி சிலர்
நிர்ப்பந்திக்கின்றனர்.
அவன் காதலி கொடுத்துவைத்தவளென
எட்டே நின்று கூடி பேசுகின்றனர்.
அவர்களுக்கு ஒருபோதும்
இச்செய்தி தெரியாது.
இறந்த காதளின்
எலும்பைக் குழலாக்கி
இசைக்கின்ற கீதங்கள்தான்
அவையென.
Amazing bro fantastic bro I am big fan of you bro
பதிலளிநீக்குமிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
நீக்குSuper lines...ungal kavithaiku naan adimai
பதிலளிநீக்குஉங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
நீக்குஇவ் வலைப்பூவிற்கு தொடர்ந்து வாருங்கள் உங்களது ஆதரவை தாருங்கள்