எனது அம்மாவும் அப்பாவும், பலருக்கு பொண்ணு/மாப்பிலை பார்த்து திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். எனது அப்பா சொன்னார், ஊருல உள்ளவங்களுக்கெள்ளாம் கல்யானம்
பன்னி வைக்கிறோம்; நம்ம பயலுகளுக்கு எப்படிப்போய் பொண்ணு கேட்க போரோமுன்னு தெரியலை?என வருந்தினார். ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களின் மனக்கவலையாக இது
இருக்கிறது. உடனே எ அம்மா சொன்னார், நீங்களே பொண்ணு பாத்துக்கிட்டு வந்துருங்க. நாங்க கல்யானத்த பன்னி வைச்சுருறோம், . அதற்கு நான், கண்ணு தெரியாத ஒரு பொண்ணத்
தான் கூட்டிக்கிட்டு வருவேன் சரியா? அதற்கு அவர்கள், ஒன்ன அங்க இங்க கூட்டிக்கிட்டு பொரமாதிரியும், ஒன்ன பாத்துக்கிறமாதிரியும் ஓங்கூட படிக்கிறதுல ஒரு நல்ல
பொண்ணா பாத்துக் கூட்டிக்கிட்டு வா என்றனர். அவர்களுக்குக் கூட ஒரு பார்வையற்ற பெண்ணை ஏத்துக்கொள்வதில் தயக்கமிருக்கிறது. அதுபோன்ற பல் மடங்கு தயக்கம் எனக்கு
பெண்கேட்டுப் போகும் வீட்டாரிடம் இருப்பது இயல்புதானே. செரி எனது பெற்றோரின் ஆசையை நிரைவேற்றுவோம் என நினைத்தாலும்; பார்வையற்றொரின் வாழ்வியலை புரிந்துகொண்டு
அதற்கு ஏற்றார் போல் பழகும், எனக்குப் பிடித்த பெண்ணை நான் இன்னும் சந்திக்கவே இல்லை. அதுவரை எனது கற்பனைக் காதலியுடன் கைகோர்த்து நடப்பேன்; கனவுகளிலும், கவிதைகளிலும்.
பன்னி வைக்கிறோம்; நம்ம பயலுகளுக்கு எப்படிப்போய் பொண்ணு கேட்க போரோமுன்னு தெரியலை?என வருந்தினார். ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களின் மனக்கவலையாக இது
இருக்கிறது. உடனே எ அம்மா சொன்னார், நீங்களே பொண்ணு பாத்துக்கிட்டு வந்துருங்க. நாங்க கல்யானத்த பன்னி வைச்சுருறோம், . அதற்கு நான், கண்ணு தெரியாத ஒரு பொண்ணத்
தான் கூட்டிக்கிட்டு வருவேன் சரியா? அதற்கு அவர்கள், ஒன்ன அங்க இங்க கூட்டிக்கிட்டு பொரமாதிரியும், ஒன்ன பாத்துக்கிறமாதிரியும் ஓங்கூட படிக்கிறதுல ஒரு நல்ல
பொண்ணா பாத்துக் கூட்டிக்கிட்டு வா என்றனர். அவர்களுக்குக் கூட ஒரு பார்வையற்ற பெண்ணை ஏத்துக்கொள்வதில் தயக்கமிருக்கிறது. அதுபோன்ற பல் மடங்கு தயக்கம் எனக்கு
பெண்கேட்டுப் போகும் வீட்டாரிடம் இருப்பது இயல்புதானே. செரி எனது பெற்றோரின் ஆசையை நிரைவேற்றுவோம் என நினைத்தாலும்; பார்வையற்றொரின் வாழ்வியலை புரிந்துகொண்டு
அதற்கு ஏற்றார் போல் பழகும், எனக்குப் பிடித்த பெண்ணை நான் இன்னும் சந்திக்கவே இல்லை. அதுவரை எனது கற்பனைக் காதலியுடன் கைகோர்த்து நடப்பேன்; கனவுகளிலும், கவிதைகளிலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக