இன்று எங்களது பள்ளியில் சைக்கிள் கொடுப்பதற்காக மாணவர்களை 8.30ற்கே தலைமையாசிரியை வரச் சொல்லியிருந்தார். அவர்கள் 8 மணிக்கே ஆஜராகி விட்டனர்.
மணி 8 முப்பதைக் கடந்ததும் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து, ஸ்டாப் ரூமில் இருந்த என்னிடம், டீச்சருங்கெல்லாம் எப்ப சார் வருவாங்க? எனக் கேட்டுக்கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க, என ஒவ்வொருவருக்கும் சொல்லிக்கொண்டிருந்தேன்.
மணி 8.35 ஆனது, மீண்டும் அதே வினாவை ஒவ்வொருவராக கேட்டு ஸ்டாப் ரூம் பக்கம் வரத் தொடங்கினர்.
8.40 மணிக்கு கொத்தாய் மொத்தமாக மாணவர்கள் வந்து, அதே வினாவைக் கேட்டனர். இம்முறை நான், அவர்களிடம் தமிழ் பரிட்சை எப்போ? நாலாம் தேதி ஐயா என்றனர். திங்கட்கிழமை காலைல எட்டரைக்கு தமிழ் ஸ்டெடி. எல்லாரும் வந்துடனும் என்றேன். மாணவர்கள் கோரசாக நன்றி ஐயா! எனச்சொல்லி விட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு ஒரு பய கூட ஸ்டாப் ரூம் பக்கம் எட்டிப் பாக்கல.
நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரே உள்ளவர்களே தீர்மானிக்கிறார்கள்!
பதிவு எழுதப்பட்ட நாள் 29-02-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக