இங்கே துலாவு

வெள்ளி, 19 ஜனவரி, 2018

செயல்வழி கற்றல்

ஒருமுர எங்கள் வகுப்பை ஜின்னா சாரிடம் அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது வரலாறு தொடர்பாக ஒரு வினாவை ஒரு பையனிடம் கேட்டார். அதற்கு அவனுக்கு விடை தெரியவில்லை.
உடனே அவனைத் திட்டாது; என்னப்பா பாடம் எடுக்குரீங்க? என்று ஆசிரியர்களை கடிந்துகொண்டார். பாடமெடுக்கும்போது மாணவனுக்கு பிடிச்ச மாதிரி எடுக்கனு என்றார். வரலாற்று
இடங்கலெள்ளாம் வருரது போல ஒரு பாட்டு இருக்குது அது என்ன பாட்டுன்னு தெரியுமா என கேட்டார். ஆசிரியர்கள் யாரும் வாய் திரக்கவில்லை. உடனே இவனே நீ சொல்லுடா என்றார்.
அந்த இவன் நாந்தான் உடனே வரிகளைச்சொல்லத் தொடங்கினேன். முன்னழகு தஞ்சாவூரு பின்னழகு தாஜுமஹால் கட்டழகு மைசூர்மஹால் காலழகு குதுப்பினார். மச்சமேனி பாக்கும்போது
கட்சத்தீவுதான். நீ, மாநகரம், இல்ல தலைநகரம் அந்த கெஸ்மீர் முதல் கன்னியாகுமரி எல்லாம் உன்னோட. இது போல மாணவர்களுக்கு பிடிச்ச பாட்டெள்ளாம் சொன்னா அவன் எப்படி
மரப்பான் என்றார். நான் k.k.நகரில் வேலைப்பார்க்கும்போது, ஒரு பையனிடம், 5-இல் 3 போனால் எத்தனை எனக்கேட்டேன். அவன் விடை தெரியாமல் விழித்தான். அடுத்த நாள் அந்தப்பையன்,
மிட்டாய் வாங்கனும் காசு கொடுங்க சார் எனக்கேட்டான். நான் 2 ரூ. கொடுத்தேன். உடனே அவன் சொன்னான், ஒங்ககிட்ட 5 ரூ. கொடுத்து வச்சுருந்தேன் சார். இப்போ 2 ரூ.
வாங்கிட்டேன். என்னோட காசு இன்னும் 3 ரூ. ஒங்க கிட்ட இருக்குது சார் என்றான். இதை சொல்லிய அவர் பணமென்றவுடன் கணக்கை சரியாக பயன்படுத்துகிறான். கணக்குப்பாடமென்று
வரும்போது, இதே கணக்கு சிறமமாய் இருக்கிறது. நீங்களெள்ளாம் மாணவனுக்கு பிடித்தது போல பாடம் எடுங்கப்பா என்றார். ஜின்னா சாரிடம் சொல்ல கதைகள் ஏராலமிருந்தது.
பார்வையற்றோர் கல்விகுறித்து விரிந்த சிந்தனையை அவர்கொண்டிருந்தார். இதை அவரைச்சந்தித்த சில தருனங்களில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், மாணவர்கள் அதிகம் நன்கொடையாளர்களுக்கு
நன்றி சொல்லும் வரவேட்பு உரையையும், தலைமையுரையுமே கேட்கும் துர்பாக்கியத்தை பெற்றுவிட்டோம் என்பதில் வருந்துகிறோம்.
 #ஜின்னாசார்நினைவலைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக