12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் நான்கு
நாட்களாக ஹாய் என்று மட்டும் வாட்சாப்பில் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாந்.
எனக்கோ கடுப்பு வந்துவிட்டது.
"நா ஒனக்கு வாத்தியாரு. ஒரு மட்டுமரியாத
வேண்டாமா? வெறுமனே ஹாய்ந்னு மட்டும் மெசேஜ்
அனுப்புற? சார்ந்னு சேத்து அனுப்புனா நீங்க
கொறஞ்சுபோய்ருவீங்களோ?" என மெசேஜ் தட்டிவிட்டேன்.
"மன்நுச்சுக்கங்கயா, அப்படியெல்லாம் நான் நெனப்பநாயா? சாருக்கு
ஸ்பெல்லிங் தெரியல அதனாலதாயா அனுப்பல." என வாய்ஸ் நோட் அனுப்புறாந்.
தொடக்கத்துல கடுப்புல இருந்த நான்
இப்போ, அவன் உண்மையச் சொல்றானா பொய்யச் சொல்றானா எனத்
தெரியாம டௌட்டில் திரியிறேன். நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டாங்கேபோல!
#எனக்கு_வாய்த்த_நல்_மாணாக்கர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக